tamilnadu

img

போதை மருந்து ஊசி போட்டு நாள்தோறும் சித்ரவதை!

போபால்:
தனக்கு போதைமருந்து செலுத்தி, தினமும் சித்ரவதை செய்வதாக, பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது அவரது மகள் குற்றம் சாட்டியுள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலம்போபால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் நாத் சிங். பாஜக தலைவரான இவர் முன்னாள்எம்எல்ஏ-வாகவும் இருந்துள்ளார். இவர்மீதுதான், அவரது மகள் பாரதி சிங் மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தனது மகளைக் காணவில்லை என்று சுரேந்தர்நாத் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், “தான் காணாமல் போகவில்லை; சித்ரவதை தாளாமல் ஒளிந்து வாழ்கிறேன்” என்று வீடியோவில் தோன்றி பாரதி சிங் பேசியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:

“நான் என் விருப்பப்படி வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஒரு எம்எல்ஏ-வின் மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும், என என் வீட்டில் கட்டாயப்படுத்து கிறார்கள். அதை இறுதிவரையில் நான் ஏற்றுக்கொள்ளாத தால் ஊசி மூலம் எனக்குப்போதை மருந்தை ஏற்று கிறார்கள். தினமும் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் எனப் போலியாக மருத்துவச் சான்றிதழ் வாங்கி, வேண்டுமென்றே என்னைத் துன்புறுத்துகிறார்கள்; தற்போது நான் சந்தோசமாக உள்ளேன். தயவு செய்து என்னைத் தொல்லை செய்யாதீர்கள்” என வேதனையுடன் பேசியுள்ளார்.அத்துடன், தனது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு, மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்திலும் பாரதி சிங் முறையிட்டுள்ளார்.பாரதி சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதற்கு ஆதாரமாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கூட அவர்3 பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றிருப்ப தற்கான ஆதாரத்தை பாரதி சிங்-கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

;